| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3503 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார்.) 2 | திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர் செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2 | அன்று,Andru - முன் பொருகாலத்தில் செரு கடுத்து,Seru kaduthu - யுத்தத்திலே செருக்கு விஞ்சி திகைத்த அரக்கரை,Thigaiya arakkarai - ஆரைச் சண்டைக்கிழுக்கலாமென்று திசைத்திருந்த ராக்ஷஸர்கள் உரு கெட,Uru keda - உருவம் கெடும்படியாக வாளி வொழிந்த ஒருவன் கண்டீர்,Vaalai vazhindha oruvan kandeer - அம்புகளைப் பொழிந்த மஹா வீரனன்றோ திருக்கடித்தானமும் என்னுடைய சிங்கையும்,Thirukkadiththaanamum ennudaiya singaiyum - திருக்கடித்தானப்பதியையும் எனது நெஞ்சையும் ஒருக்கத்து,Orukkaththu - ஒருசேரப்பிடித்து உள்ளே உறையும் பிரான்,Ullae uraiyum piraan - இரண்டினுள்ளும் வர்த்திக்கிற பெருமான். |