Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3503 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3503திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார்.) 2
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2
அன்று,Andru - முன் பொருகாலத்தில்
செரு கடுத்து,Seru kaduthu - யுத்தத்திலே செருக்கு விஞ்சி
திகைத்த அரக்கரை,Thigaiya arakkarai - ஆரைச் சண்டைக்கிழுக்கலாமென்று திசைத்திருந்த ராக்ஷஸர்கள்
உரு கெட,Uru keda - உருவம் கெடும்படியாக
வாளி வொழிந்த ஒருவன் கண்டீர்,Vaalai vazhindha oruvan kandeer - அம்புகளைப் பொழிந்த மஹா வீரனன்றோ
திருக்கடித்தானமும் என்னுடைய சிங்கையும்,Thirukkadiththaanamum ennudaiya singaiyum - திருக்கடித்தானப்பதியையும் எனது நெஞ்சையும்
ஒருக்கத்து,Orukkaththu - ஒருசேரப்பிடித்து
உள்ளே உறையும் பிரான்,Ullae uraiyum piraan - இரண்டினுள்ளும் வர்த்திக்கிற பெருமான்.