| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3504 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பாட்டு தனிப்பட அந்வயிக்கமாட்டாது, கீழிரண்டாம் பாட்டுக்கு சேஷபூதமாகியே அந்வயிக்கும். அப்பாட்டின் பின்னடிகள் “செருக்கடுத்தன்று திகைத்தவர்க்கரை உருக்கெட வாளியொழிந்த வொருவனே” என்றுள்ளது. அப்படி வாளியொழிந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகனார் இருந்தவிதம் இப்படிப்பட்ட தென்கிறது இப்பாட்டில். “வாளிபொழிந்தபடி எங்ஙனே யென்ன ஈங்ஙனே யென்கிறார்“ என்பது ஈட்டு அவதாரிகை.) 3 | ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான் திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3 | ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று,Oruvar iruvar or moovaer ena ninru - (இலங்கையில் மூல பலத்தை முடிக்குமிடத்து) முதலில் ஒருவனாய், பின்பு இருவராய், பின்னையும் மூவராய்த் தோன்றி நின்று (பின்னையும்) உருவு காத்து,Uruvu kaathu - ரூபம் இலக்குக் குறிக்க வொண்ணாதபடி இந்திரியத்திற்கு அவிஷயமாகி செருக்குத்தன்சு திகைத்த வரைக்கரை உருக்கெட வாளி யொழிந்த வொருவன் திரு அமர் மார்வன்,Thiru amar maarvan - லக்ஷிமியைத் திருமார்பிலே யுடையனாய்க் கொண்டு திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான்,Thirukkadiththaanathai maruvi uraiyinra maayappiraan - திருக்கடித்தானத்தே பொருந்தி நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சர்ய சீலனான எம்பெருமான் உள்ளுந்தோறும் தித்திப்பான்,Ullundhoarum thiththippaan - நினைக்குந்தோறும் இனியனாகா நின்றான். |