| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3506 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்பக்கவிலுண்டான ப்ர்ரேமோதியத்தாலே திருக்கடிகத்தானத் திருப்பதியோடே கூடவந்து என் ஹ்ருதயத்திலே புகுந்தருளினானென்கிறார்.) 5 | கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம் கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5 | கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ,Koil kol deivam ellam thozha - தங்களுக்கென்று விமானங்கயுடையரான நித்ய ஸூரிகளெல்லாரும் தொழும்படியாக வைகுந்தம் கோயில் கொண்ட,Vaikundham koil kondha - ஸ்ரீ வைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடையனாய் குடக்கூத்த அம்மான்,Kudakkooththa ammaan - (அவதரித்த விடத்தே) குடகூத்தாடும் பெருமானைவன் திருக்கடித் தானத்தை தன் கோயில் கொண்டான்,Thirukkadiththaanathai than koil kondaan - திருக்கடித்தானத்தை தனது கோயிலாக ஸ்வீகரித்துக் கொண்டவனாய் அதனோடும்,Adhanodum - அது தன்னோடே என் நெஞ்சகம் கோயில் கொண்டான்,En nenjagam koil kondaan - என்னெஞ்சையும் தனக்குக் கோயிலாகக் கொண்டான். |