| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3508 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தானத்தை ஏத்துங்கோளென்றார் கீழ்ப்பாட்டில், ஏத்த வேண்டா, அத்தலத்தை நெஞ்சாலே நினைத்தாலும் போது மென்கிறார் இதில்.) 7 | கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7 | கோவிந்தன்,Govindan - கோவிந்தனான பெருமானுடைய மண் விண் முழுதும் அளந்த ஒண்தாமரை,Mann vin muzuthum alandha ondhthamarai - மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒன்றொழியாமல் அளந்து கொண்ட அழகிய திருவடித்தாமரைகளை மண்ணவர் தாம் தொழ,Mannavar thaam thozha - இந்நிலத்திலுள்ளார் தொழா நிற்க. வானவர் தாம் வந்து நண்ணு,Vaanavar thaam vandhu nannu - ப்ரமபதத்திலுள்ளார் தாங்களும் (சீலகுணாநுபவம் பண்ண) வந்து சேருமிடமான திருக்கடித்தானம் நகர்,Thirukkadiththaanam nagar - திருக்கடித்தானப்பதியை இடர் கெட,Idhar keda - துக்கமெல்லாம் தொலைய உள்ளத்து கொண்மின்,Ullathu konmin - நெஞ்சிலே கொண்டு சிந்தியுங்கோள் |