| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3509 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷண நகரங்கள் பல பல வுண்டா யிருக்கச் செய்தேயும் என்னுடைய நெஞ்சையும் திருக்கடித்தானத திருப்பதியையும் தனக்கு தாய ப்ராப்தமான ஸ்தானமாகக் கொண்டு விரும்பி யிருப்பதாக அருளிச் செய்கிறாரிதில்.) 8 | தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும் வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித் தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8 | வான் இ நிலம் கடல் எங்கெங்கும்,Vaan e nilam kadal engengum - பரமபதம் இவ்வுலகம் திருப்பாற்படல் ஆகிய எல்லாவிடத்தும் தானம் நகர்கள் முற்றும்,Thaanam nagarhal muzhudhum - வாஸஸ்தானமான நகரங்கள் முற்றவும் தலை சிறந்து,Thalai sirandhu - மிக்க சிறப்பமைத்து எம்மாயற்கே ஆன இடத்தும்,Emmaayarkae aan idaththum - எம்பெருமானுக்கே ஆயிருக்கைச் செய்தேயும் என் நெஞ்சும்,En nenjum - எனது நெஞ்சமும் திருக்கடித்தானம் நகரும்,Thirukkadiththaanam nagarum - திருக்கடித்தான மென்கிற திருப்பதியும் தன தாயம் பதியே,Thana thaayam pathiye - தனக்கே அஸாதாரண ப்ராப்தமான தலமாயிரா நின்றது. |