| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3510 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன, அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார்.) 9 | தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும் மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9 | தேசம் அமரர் திருக்கடித்தானத்துள் உறை,Desam amarar thirukkadiththaanaththul urai - தேசுபொலிந்த நித்யஸூரிகளுக்கும் பிராப்ய மான திருக்கடித்தானப் பதியிலே வாழ்பவனாய் ஆயர்க்கு அதிபதி,Aayarkku athipathi - கோபாலர் தலைவனாய் அற்புதன் தான்,Arputhan thaan - ஆச்சர்யபூதனான பெருமான் தான் தாயப் பதிகள் எங்கெங்கும் தலை சிறந்து,Thaayap padikal engengum thalai sirandhu - தனக்கு அஸாதாரணமான திருப்பதிகள் எல்லாவிடத்திலும் சிறப்பமைந்து மாயத்தினால்,Maayaththinaal - தன்னுடைய இச்சையினாலே மன்னி வீற்றிருந்தான்,Manni veetrirundhaan - பொருந்தியெழுந்தருளி யிருப்பவன் |