Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3510 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3510திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன, அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார்.) 9
தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9
தேசம் அமரர் திருக்கடித்தானத்துள் உறை,Desam amarar thirukkadiththaanaththul urai - தேசுபொலிந்த நித்யஸூரிகளுக்கும் பிராப்ய மான திருக்கடித்தானப் பதியிலே வாழ்பவனாய்
ஆயர்க்கு அதிபதி,Aayarkku athipathi - கோபாலர் தலைவனாய்
அற்புதன் தான்,Arputhan thaan - ஆச்சர்யபூதனான பெருமான் தான்
தாயப் பதிகள் எங்கெங்கும் தலை சிறந்து,Thaayap padikal engengum thalai sirandhu - தனக்கு அஸாதாரணமான திருப்பதிகள் எல்லாவிடத்திலும் சிறப்பமைந்து
மாயத்தினால்,Maayaththinaal - தன்னுடைய இச்சையினாலே
மன்னி வீற்றிருந்தான்,Manni veetrirundhaan - பொருந்தியெழுந்தருளி யிருப்பவன்