திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3511 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3511திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (ஆழ்வார் தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர் தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு.) 10
அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம் நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே–8-6-10
பதவுரை Show / Hide
அற்புதன்,Arputhan - அத்புத சேஷ்டிதனாய்
நாராயணன்,Naarayanan - நாராயணனாய்
அரி வாமனன்,Ari vaamanan - ஹரியாய் வாமனனான எம்பெருமான்
மேவி இருப்பது என் நெஞ்சகம்,Mevi iruppathu en nenjagam - பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே,
நிற்பது,Nirpathu - அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்)
நல் புகழ் வேதியர்,Nal pugazh vedhiyar - புகழ்மிக்க வைதிகருடைய
நால் மறை,Naal marai - நான்கு வேதங்களும்
நின்று அதிர்,Nindra adhira - நிலைநின்று முழங்கும்படியாய்
கற்பகம் சோலை,Karppagam solai - கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்ததான
திருக்கடித்தானம்,Thirukkadiththaanam - திருக்கடித்தானத்திலே