| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3512 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார்.) 11 | சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல் பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11 | சோலை திருக்கடித் தானத்து உறை திருமாலை,Solai thirukkadiththaanaththul urai thirumaalai - சோலைமிக்க திருக்கடித்தானப்பதியில் வாழும் திருமாலைக்குறித்து மதிள் குருகூர் சட கோபன்,Madhil kurukoor sadagopan - நம்மாழ்வார் சொல்,Sol - அருளிச்செய்ததாய் பாலோடு அமுது அன்ன,Paalodu amudhu annam - பாலும் அமுதும் கலந்தாற்போல் பரம போக்யமான ஆயிரத்து,Aayirathu - ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,Ip paththum - இப்பதிகம் மேலை வைகுந்தத்து,Melai vaikundhathu - ஸர்வோத்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே வியந்து இருத்தும்,Viyandhu iruththum - உகந்து இருக்கச் செய்யும். |