Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3512 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3512திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார்.) 11
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11
சோலை திருக்கடித் தானத்து உறை திருமாலை,Solai thirukkadiththaanaththul urai thirumaalai - சோலைமிக்க திருக்கடித்தானப்பதியில் வாழும் திருமாலைக்குறித்து
மதிள் குருகூர் சட கோபன்,Madhil kurukoor sadagopan - நம்மாழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்ததாய்
பாலோடு அமுது அன்ன,Paalodu amudhu annam - பாலும் அமுதும் கலந்தாற்போல் பரம போக்யமான
ஆயிரத்து,Aayirathu - ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,Ip paththum - இப்பதிகம்
மேலை வைகுந்தத்து,Melai vaikundhathu - ஸர்வோத்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
வியந்து இருத்தும்,Viyandhu iruththum - உகந்து இருக்கச் செய்யும்.