Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3513 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3513திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (நான் அர்த்தியாய்க் கூப்பிட்டழைக்க விடாயெல்லாம் தீரும்படி. தான் அர்த்தியாய் என்னெஞ்சிலே பெறாப்பேறு பெற்றானாகப் புகுந்திராநின்றானென்கிறார்.) 1
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1
என்னை,Ennai - அடியனை
வியந்து,Viyandhu - திருவுள்ளமுவந்து
தன் பொன் அடி கீழ் இருத்தும் என்று,Than pon adi keezh iruththum endru - தன் திருவடிகளின் கீழே இருத்தியருள்வானாக வென்று
அருத்தித்து எனைத்தோர் பல நாள்,Aruththiththu enai thoor pala naal - அனேக காலம் நாள்தோறும்
அழைத்தேற்கு,Azhaiththaeerku - அழைத்துக் கூப்பிட்ட வென் விஷயத்தில்
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து,Poruththam udai vaamanan thaan pugundhu - ப்ராவண்யமுடையனான எம்பெருமான் தானே வந்து புகுந்து
என் தன் கருத்தை உற,En than karuththai ura - என்னுடைய கருத்தைத் தானுடையனாய்க்கொண்டு
கண்டு கொண்டு,Kandu kondu - என்னையே பார்த்துக்கொண்டு
வீற்றிருந்தான்,Veetrirundhaan - எழுந்தருளியிரா நின்றான்