Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3514 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3514திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலிமாண்டொழியும்படி தன்னழகாலே செய்து என்னை விஷயீகரித்தருளின பேருதவிக்கு, கஜேந்திராழ்வான் திறந்துச் செய்த உதவியும் ஒவ்வாதென்கிறார்.) 2
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே–8-7-2
எனது ஏழை நெஞ்சு ஆளும்,Enathu ezhai nenju aalum - என்னுடைய சபலமான நெஞ்சைத் தங்களிஷ்டப்படி நடத்திக் கொண்டு போகிற
திருந்தாக ஓர் ஐவரை,Thirundhaaka or aivarai - துஷ்டபஞ்சேந்திரியங்களும்
தேய்ந்து அறமன்னி,Theyndhu aramanni - க்ஷயித்து முடியும் படியாக என்பால் பொருந்தியிருந்து
கண்டு கொண்டு இருந்தான்,Kandu kondu irundhaan - (நிதியெடுத்தவன் நிதினய்யே கண்டு கொண்டிருக்குமா போலே) என்னையே கண்டு கொண்டிருக்கின்றான்.
பெரு தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தான்,Peru thaal kalitrrukku arul seydha perumaan thaan - பெரிய தாளையுடைய யானைக்கு அருள் செய்து ஸர்வாதிகனானவ்வன்
தரும் அருள் தான்,Tharum arul thaan - அந்த யானைக்கத் தந்த வருளை
இனி யான் அறியேன்,Ini yaan ariyaen - என்பக்கல் பண்ணின வருளைக்கண்ட பின்பு அருளாக மதிக்கின்றிலேன்.