திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3515 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 3 | அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3 | பதவுரை Show / Hideஅருள் தான் இனியான் அறியேன்,Arul thaan iniyaan ariyaen - இவ்வருளல்லது மற்றோரருளை நானோர்ருளாக மதியேன் அவன் தான்,Avan thaan - அப்பெருமான் என் உன் இருள் அற,En un irul ara - எனது உள்ளிருள் தொலையும்படி வீற்றிருந்தான்,Veetrirundhaan - (எண்ணுள்ளே) எழுந்தருளியிராநின்றான், இது அல்லால்,Idhu allaal - இவ்விருப்புத்தவிர பொருள் தான் எனில்,Porul thaan enil - (அவனுக்கு) வேறு புருஷார்த்த முண்டோவென்னில் மூ உலகும் பொருள் அல்ல,Moo ulagum porul alla - த்ரிலோகாதிபதித்வமும் ஒரு பொருளாகவுள்ள தன்று ஈது மருள் தானோ,Idhu marul thaano - இது தான் என்ன ப்ரம்மோ! மாயம் மயக்கு மயக்கே,Maayam mayakku mayakkae - (அவன் தான்) ஆச்சரியமான ப்ர்ரமகசேஷ்டிதங்களாலே மயக்குகிற படியோ? |