Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3515 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3515திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 3
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3
அருள் தான் இனியான் அறியேன்,Arul thaan iniyaan ariyaen - இவ்வருளல்லது மற்றோரருளை நானோர்ருளாக மதியேன்
அவன் தான்,Avan thaan - அப்பெருமான்
என் உன் இருள் அற,En un irul ara - எனது உள்ளிருள் தொலையும்படி
வீற்றிருந்தான்,Veetrirundhaan - (எண்ணுள்ளே) எழுந்தருளியிராநின்றான்,
இது அல்லால்,Idhu allaal - இவ்விருப்புத்தவிர
பொருள் தான் எனில்,Porul thaan enil - (அவனுக்கு) வேறு புருஷார்த்த முண்டோவென்னில்
மூ உலகும் பொருள் அல்ல,Moo ulagum porul alla - த்ரிலோகாதிபதித்வமும் ஒரு பொருளாகவுள்ள தன்று
ஈது மருள் தானோ,Idhu marul thaano - இது தான் என்ன ப்ரம்மோ!
மாயம் மயக்கு மயக்கே,Maayam mayakku mayakkae - (அவன் தான்) ஆச்சரியமான ப்ர்ரமகசேஷ்டிதங்களாலே மயக்குகிற படியோ?