Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3516 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3516திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 4
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே–8-7-4
ஆயன்,Aayan - கோபலக்ருஷ்ணனாயும்
அமரர்க்கு,Amararukku - நித்யஸூரிகளுக்கு
அரி ஏறு,Ari yeru - அளவிடமுடியாத மேன்மையையுடையனாயு மிருக்கிற
எனது அம்மான்,Enathu ammaan - எம்பெருமான்
தேசம் திகழும் தன்திரு அருள் செய்து,Desam thigazhum than thiru arul seydhu - தேசப்ரஸித்த மாம்படியான தன் அஸாதாரண க்ருபையைப்பண்ணி
தனது தூய சுடர் சோதி,Thanathu thooya sudar sothi - தன்னுடைய நிர்மல தேஜோமய திவ்யமங்கள விக்ரஹத்தை
என் உள் வைத்தான்,En ul vaiththaan - எனது நெஞ்சினுள்ளே ஸுப்ரதிஷ்டிதமாக்கினான், (இது மெய்யேயாதலால்)
என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான்,Ennai vanjiththu maaya mayakku mayakkaan - என்னிடத்தில் வஞ்சகனாய் ப்ரமிக்கச்செய்கிறானல்லன்