| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3516 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 4 | மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான் தேசந்திகழும் தன் திருவருள் செய்தே–8-7-4 | ஆயன்,Aayan - கோபலக்ருஷ்ணனாயும் அமரர்க்கு,Amararukku - நித்யஸூரிகளுக்கு அரி ஏறு,Ari yeru - அளவிடமுடியாத மேன்மையையுடையனாயு மிருக்கிற எனது அம்மான்,Enathu ammaan - எம்பெருமான் தேசம் திகழும் தன்திரு அருள் செய்து,Desam thigazhum than thiru arul seydhu - தேசப்ரஸித்த மாம்படியான தன் அஸாதாரண க்ருபையைப்பண்ணி தனது தூய சுடர் சோதி,Thanathu thooya sudar sothi - தன்னுடைய நிர்மல தேஜோமய திவ்யமங்கள விக்ரஹத்தை என் உள் வைத்தான்,En ul vaiththaan - எனது நெஞ்சினுள்ளே ஸுப்ரதிஷ்டிதமாக்கினான், (இது மெய்யேயாதலால்) என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான்,Ennai vanjiththu maaya mayakku mayakkaan - என்னிடத்தில் வஞ்சகனாய் ப்ரமிக்கச்செய்கிறானல்லன் |