திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3517 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3517திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (“தேசந் திகழுந்தன் திருவருள் செய்தே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த்தை இதில் விவரித்தருளுகிறார்.) 5
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5
பதவுரை Show / Hide
திகழும் தன் திரு அருள் செய்து,Thigazhum than thiru arul seydhu - மிகப்பொலிகின்ற தன் திருவருளைப்பண்ணி
உலகத்தார் புகழும் புகழ் அது தான் காட்டி தந்து,Ulagaththar pugazhum pugazh adhu thaan kaatti thandhu - லோகத்தார் இதுகண்டு புகழுகிற அப்புகழையும் பிரபலப்படுத்தி
என்னுள் திகழும் மணி குன்றம்,Ennul thigazhum mani kundram - என்னுள்ளே, விளங்கரநின்றதொரு மாணிக்க மலைபோலே நின்றான்,
எனக்கு மற்று புகழும் புகழ் ஓர் பொருளே,Enakku matru pugazhum pugazh or porule - எனக்கு இந்நிலையொழிய வேறு விதமாக அவனைப் புகழ்வதும் ஒரு பொருளோ.