Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3519 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3519திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து முறுவல் செய்து நிற்க, அத் திருப்பவளத்திலழகை யனுபவித்துப் பேசுகிறார்.) 7
செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7
செம் வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தன்னோடு,Sem vaai undhi ven pal sudar kuzai thannodu - சிவந்தவாய் திருநாபி வெளுத்த திருமுத்து அழகிய மகரக்குழை ஆகிய அவற்றோடே கூட
எவ்வாய் சுடரும்,Evvaai sudarum - மற்றெல்லா அவயவங்களின் தேஜஸ்ஸும்
தம்மில் முன்வளாய்க் கொள்ள,Thammil munvalaik kollai - ஒன்றுக் கொன்ன முற்பட்டுச் சூழ்ந்துகொள்ள
செம் வாய் முறுவரோடு,Sem vaai muruvarodu - சிவந்த திருப்ப வளத்தின் முறுவலோடே கூட
எனது உள்ளத்து இருந்த,Enathu ullathu irundha - என்னெஞ்சினுள்ளே யிருக்கின்ற
அவ்வாய் அன்றி,Avvaai anri - அவ்வித மொழுய
மற்று அருள் யான் அறியேன்,Matru arul yaan ariyaen - வேறொன்றையும் நான் நினைக்கின்றிலே.