Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3520 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3520திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி தம்மிடத்திலே எம்பெருமான் நிர்ஹேதுகமாகச் செய்தருளின அருளையிட்டு நிர்ஹேதுகமாக அருள் செய்கையே அவனுக்கு இயல்பு என்று அவன்றன்படியை நிஷ்கர்ஷிக்கிறாரிப்பாட்டில்.) 8
அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8
மற்று அருள் அறியேன்,Matru arul ariyaen - வேறொன்றையும் உபகாரமாக நினைத்தருக்கின்றிலேன்,
என்னை ஆளும் பிரானார்,Ennai aalum piraanaar - என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவர்
செய்வார்கட்கு,Seivaarukku - தாம் அருள் செய்ய நினைத்தவர்கட்கு
வெறிதே,Verithae - நிர்ஹேதுகமாகவே
உகந்து அருள் செய்வர்,Ugandhu arul seivar - திருவுள்ளமுகந்து க்ருபை பண்ணுவர்
மூ உலகும் நெறி ஆ,Moo ulagum neri aa - மூவுலகங்களையும் முறைதப்பாதபடி.
தம் வயிற்றில் கொண்டு,Tham vayittril kondu - தமக்குள்ளே கூடக் கொண்டு
சிறியேனுடை சிந்தையுள் நின்றொழிந்தாரே,Siriyenudai sindhaiyul nindrozhandhaar - க்ஷுத்ரனான என்னெஞ்சிலே நின்று விட்டாரே.