திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3522 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3522திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார்.) 10
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால் பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10
பதவுரை Show / Hide
மொய்த்து ஏய் திரை மோது,Moiththu ey thirai modhu - செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற
தண் பாற்கடலுள்,Than paarkadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே
வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை,Vaiththu ey sudar paambu anai namparanai - படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை
மதியால்,Madhiyal - அனுமதியாலே
எனது உள்ளத்து அகத்தே,Enathu ullaththu agaththae - என்னெஞ்சிலுள்ளே
வைத்தேன்,Vaiththen - பொருந்த வைத்தேன்,
என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன்,Endrum eppothum eyththae ozhivaen allaen - இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன்