| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3523 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.) 11 | சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம் விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11 | சுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை,Sudar paambu anai nam paranai thirumaalai - தேசுமிக்கசேஷயனனாய் அஸ்மத் ஸ்வாமியான திருமாலை அடி சேர் வகைவண் குருகூர் சடகோபன்,Adi ser vagaivan kurukoor sadagopan - திருவடி பணிகையையே இயல்வாகவுடையரான ஆழ்வார் முடிப்பான் சொன்ன,Mudippaan sonna - ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தினுள் இ பத்தும்,I paththum - இப்பதிகம் சன்மம் அற தேய்ந்து விட,Sanmam ara theyndhu vida - பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி தன் கண்கள் சிவந்து நோக்கும்,Than kankal sivandhu nokkum - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும் |