Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3523 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3523திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.) 11
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11
சுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை,Sudar paambu anai nam paranai thirumaalai - தேசுமிக்கசேஷயனனாய் அஸ்மத் ஸ்வாமியான திருமாலை
அடி சேர் வகைவண் குருகூர் சடகோபன்,Adi ser vagaivan kurukoor sadagopan - திருவடி பணிகையையே இயல்வாகவுடையரான ஆழ்வார்
முடிப்பான் சொன்ன,Mudippaan sonna - ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தினுள்
இ பத்தும்,I paththum - இப்பதிகம்
சன்மம் அற தேய்ந்து விட,Sanmam ara theyndhu vida - பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி
தன் கண்கள் சிவந்து நோக்கும்,Than kankal sivandhu nokkum - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும்