Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3525 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3525திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ விலஷணனாய் இருக்கிற எம்பெருமான் -என் உள்ளே புகுந்து அருளுகை அன்றிக்கே -என் சரீரத்தின் உள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் -என்னுள்ளான்-என்ன வேண்டும் இடத்தில் -அடியேன் உள்ளான் -என்கையாலே -அடியேன் என்றும் -நான் என்றும் பர்யாயம் ) 2
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2
அண்டத்து அகத்தான்,Andathu akathaan - அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் அந்த ராத்மாவாய்
புறத்து உள்ளான்,Purathu ullaan - அண்டத்துக்குப் புறம்புபட்ட பதார்த்தங்களுக்கும் அந்தராத்மாவாய்.
இதுவே படி என்று உரைக்கல் ஆம் படியன் அல்லன்,Idhuvae padhi endru uraikkal aam padiyan allan - இதுவே ப்ரகாரமென்று சொல்லலாவதொரு ப்ரகாரத்தையுடையனல்லாதனாய்
பரம்பரன்,Parambara - பராத்பரனாய்
கடி நாற்றம் சேர்,Kadi naatram ser - விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த
ஆலையுள்,Aalaiyul - தேனிலுள்ள
இன்பம்,Inbam - சுவையினுடைய
துன்பம் கழி நேர்மை,Thunbam kazhi naermai - கோதுகழிந்த ஸாரமான பாகம் போலிருக்கிற
ஒடியா,Odiyaa - விச்சேத மற்று நித்யமான
இன்பம் பெருமையோன்,Inbam perumaiyon - ஆனந்தமயனாய்
உணர்வில் உம்பர் ஒருவன்,Unarvil umbar oruvan - அறிவு விஷயத்தில் மேற்பட்டிருப்பவனான ஒருவன்
அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - பட்டிருப்பவனான ஒருவன் ஆத்மாவில் அந்தராத்மாவாயிரா நின்றான்
உடல் உள்ளான்,Udal ullaan - சரீரத்தினுள்ளாமிராநின்றான்.