திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3527 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இவ்வாத்மா தனக்குப் பரபோயமென்னுமிடத்தையும் காட்டித் தந்தருளின படியையருளிச் செய்கிறாரிதில்.) 4 | யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4 | பதவுரை Show / Hideயாதும் யவர்க்கும் முன்னோனை,Yadhum yavarkkum munnonai - ஸகல சேதநாசேதநங்களுக்கும் காரண பூதனும் தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனி முதலை,Thaanum sivanum brahmanum aagi panaiyatha thani mudhalai - தானான தன்மையனாயும் சிவனாயும் பிரமனாயும் விஸத்ருதனானப்ரதான காரண பூதனும். தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து,Thenum paalum kannalum amudhum aagi thiththiththu - தனக்குப் பரமபோக்ய மாய்க் கொண்டு ரஸித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை,En oonil uyiril unarvinil ninra onraai - என்னுடைய சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்துநின்ற ஆத்மாவை சரீரமாக யுடையனுமாய் யானும் தானாய் ஒழிந்தானை,Yaanum thaan aay ozhindhaanai - நானும் தானாய்விட்டவனான எம்பெருமானை உணர்ந்தேன்,Unarnthaan - அறிப் பெற்றேன். |