Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3534 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3534திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11
தெருளும் மருளும் மாய்த்து,Therulum marulum maayththu - ஜ்ஞாரா ஜ்ஞானங்கள் கலசிவருகிற ரீதியை யொழித்து
தன்,Than - தன்னுடைய
திருந்து செம்பொன் கழல் அடி கீழ்,Thirundhu sempon kazhal adi keezh - அழகிய செம்பொன்னாலான வீரக்கழணிந்த திருவடிகளின் கீழே
அருளி இருத்தும்,Aruli iruththum - பரம கிருபைபண்ணி ஸ்தாபிக்கிற
அம்மான் ஆம்,Ammaan aam - ஸ்வாமியாய்
அயன் ஆம் சிவன் ஆம் திருமாலால்,Ayan aam sivan aam thirumaalal - பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நிர்வஹிக்கிற எம்பெருமானாலே
அருளப்பட்ட,Arulappatta - மயர்வற மதிநலமருளப்பெற்ற
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வாருடைய
ஓர் ஆயிரத்துள் இ பத்தால்,Or aayiraththul i paththaal - ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக
நம் அண்ணல் கருமாணிக்கம்,Nam annal karumaanikkam - கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி
அருளி அடி கீழ் இருந்தும்,Aruli adi keezh irundhum - (இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை) கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன்