| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3536 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (தலைவியின் இந்நிகழ்ச்சிக்குத் தோழியானதான் உடன்பட்டவளல்லள் என்பதைத் தாய்மார்க்கு மெய்ப்பிக்கவேண்டி அன்னைமீரிதற்கென் செய்கேனென்று அடிக்கடி சொல்லுகிறாள் (தோழி)) 2 | அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும் துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான் புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2 | அன்னைமீர்! இதற்கு என் செய்கேன்-,Annayameer! Idharku en seykken - அன்னைமீர்! இதற்கு என் செய்கேன்- அணி மேருவின் மீது உலவும்,Ani meruvin meethu ulavum - அழகிய மேருமலையின் மேலே யிருப்பதாய், துன்னு சூழ் சுடர்,Thunnu sooz sudar - செறித்து சூழ்ந்த சுடரை யுடைத்தான் நாயிலும்,Naayilum - ஸூர்யனும் அன்றியும்,Andriyum - அவ்வளவே யல்லாமல் பல் சுடர்களும் போல்,Pal sudarkalum pol - பலவகைப்பட்ட க்ரஹநக்ஷத்ரங்களினுடைய தேஜஸ்ஸும்போலே யிருக்கிற மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான்,Minnu neel mudi aaram pal kalan than udai emperumaan - ஒளி பொருந்தி ஓங்கின திருவபிஷேகம் ஹாரம் முதலான பல திருவாபரணங்களை யுடையனான எம்பெருமானுடைய புன்னை அம்பொழில் சூழ் திருப்புலியூர்,Punnai ampozhil sooz thiruppuliyoor - அழகிய புன்னைச் சோலைகளாலே சூழப்பட்ட திருப்புலியூரை இவள் புகழும்,Eval pugazhum - இத்தலைவி (நிரநதரமாகப்) புகழ்ந்து கொண்டிராநின்றாள். |