Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3538 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3538திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -வெறும் ஆண் பிள்ளைத் தனமே அன்றிக்கே -குணவானாய் ஆபத்சகனாய் -இருக்கிறவனுடைய குணாதிக்யத்திலே இவள் ஈடுபட்டாள் என்கிறாள்.) 4
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே–8-9-4
ஊர் வளம் கிளர் சோலையும்,Oor valam kilar soalayum - ஊரின் வளத்தைத் தெரிவிக்கின்ற சோலைகளும்
கரும்பும் பெருசெந்நெலும் சூழ்ந்து,Karumbum perucennanellum soozhndhu - கரும்புகளும் பெரிய செந்நெற் பயிர்களும் சூழப்பெற்றிருப்பதாய்
ஏர் வளம் கிளர் தண் பணை,Yer valam kilar than panai - செல்லு மழகுமிக்க குளிர்ந்த நீர் நிலங்களை யுடைத்தான
குட்டநாடு திருப்புலியூர்,Kuttanaadu thiruppuliyoor - திருப்புலியூரில்
சீர் வளம் கிளர்,Seer valam kilar - திருக்குணங்களின் சிறப்பு விளங்கப் பெற்ற
மூ உலகு உண்டு,Moo ulagu undu - த்ரிலோக ரக்ஷகனான எம்பெருமானுடைய
பேர் வளம்,Per valam - திருநாமங்களின் சிறப்பை
இன்று,Enru - ஆபரணமணிந்த இந்நாளில்
இப் புனையிழை,Ep punaiyizhai - இத்தலைமகள்
கிளர்ந்தன்றி பேச்சு இலள்,Kilarndhanri peechu illal - ஓவாது சொல்லா நின்றாள்.