| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3539 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீஆறாயிரப்படியருளிச் செயல்காண்மின், “அவன் ஸௌந்தர்ய சீலாதிகுணங்களை உடையனானாலென், வேறேயொருவனை அந்வேஷித்து அவனுக்கும் கொடுக்கக் கடவதாய்ச் சொல்லாநின்றபின்பு இனிச் செய்யலாவதில்லை யென்று தாயர் சொல்ல, தோழியானவள், இயற்கையிற்புணர்ச்சியைச் சொல்லுகை ஈடன்றியேயிருக்கச் செய்தே “இவளயிழக்கிறோம் என்னும் பயத்தாலே முன்னமே திருப்புலியூர் முனைவனான ஸர்வேச்வரனிவளோடே புணர்ந்தருளினானென்கிறாள்“ என்று.) 5 | புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும் நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால் சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5 | புனை இழைகள் அணிவும்,Punai izhaigal anivum - ஆபரணங்கள் பூணும்மழகும் ஆடை உடையும்,Aadai udaiyum - சேலையுடுக்குமழகும் புதுக்கணிப்பும்,Puthukkanippum - வடிவில் பிறந்த புதுமையும் இவட்கு நின்று நினைக்க புக்கால்,Ivatku ninru ninaikka pukkaal - இத்தலைவிக்கு இருக்கும்படியை ஆராய்ந்தால் இது நினையும்,Ithu ninaiyum - இந்த வைலக்ஷண்யம் (லோகமர்யாதையில் நினைக்கக் கூடியதாக இல்லை, (ஆதலால்) சுனையினுள் தட தாமரை மலரும்,Sunaiyinul thada thamarai malarum - சுனைகளுக்குள்ளே பெரிய தாமரைகள் மலரப்பெற்ற தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூர்க்குத் முனைவன்,Munaivan - தலைவனும் மூ உலகு ஆளி அப்பன்,Moo ulagu aali appan - த்ரிலோகாதிபதியுமான எம்பெருமானுடைய திரு அருள் மூழ்கினள்,Thiru arul moozhginanl - திருவருளிலே இவள் அவகாஹிக்கப் பெற்றிருக்கவேண்டும். |