திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3540 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3540திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பெண்பிள்ளையின் அதரம் இதற்கு முன்பிருந்தபடியும் இப்போதிருக்கிறபடியும் காணமாட்டீர்களோ? அதரத்தில் பழுப்புக்கு அடியறியீர்களோ? திருப்புலியூர்ச்சோலைகளில் வளரும் கமுகம்பழத்தின் பழுப்புப்போலே யிராநின்றபடி பாரீர், அவ்வூர்ப்பெருமான் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌலப்யாதிகளைக் காட்டி இவளையீடுபடுத்திக் கொண்டானென்பதற்கும் இவளுக்கு அவனோடு கலவி ப்ராப்தமாயிற்றென்பதற்கும் அடையாளம் ஒன்றிரண்டல்லவே, நீங்களே நன்கு ஆராய்ந்து பார்க்கலாமே யென்கிறாள் தோழி.) 6
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான் திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை யாளம் திருந்த உள திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே–8-9-6
பதவுரை Show / Hide
செழுநீர் நிறம் கண்ணபிரான் திருஅருள்,Sezhu neer niram kannapiraan thiru arul - கடல் வண்ணனான கண்ணபிரானுடைய திருவருளிலே
வைகலும் மூழ்கி,Vaikalum moozhgi - நிரந்தரமாக அவகாஹித்து
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு,Thiru arulgalum serndamaiyku - (அவனது) ஸகலவித அநுக்ரஹங்களையும் பெற்றமைக்கு
அடையாளம் திருந்த உள,Adaayaalam thirundha ula - அடையாளங்கள் மறைக்க வொண்ணாதபடியுள்ளன.(அவற்றுள் முக்கியமான அடையாளம் மொன்று கேளீர்)
திரு அருள் அருளால்,Thiru arul arulal - தன்னுடைய திருவருளை அருளுகைக்காக
அவன் சென்று சேர் தண் திருப்புலியூர்,Avan sendru ser thaan thiruppuliyoor - அப்பெருமான் வந்துறையுமிடமான குளிர்ந்த திருப்புலியூரில்
திரு அருள் கழுகு ஒண் பழத்தது,Thiru arul kazhugu on pazhaththu - அவனதருளால் வளரும் கமுகினுடைய அழகிய பழம் போன்றுள்ளது.
மெல் இயல் செம் இதழ்,Mel iyal sem idhazh - இத்தலைவியின் சிவந்த அதரம்.