Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3541 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3541திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரிலுள்ள அஃறிணைப் பொருள்களுங்கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழாநிற்கு மியல்வைக்கண்டு இத்தலைவியும் அத்திருப்பதி யெம்பெருமானோடே கலந்துவாழப்பெற்றாளென்கிறாள் தோழி.) 7
மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே–8-9-7
மெல் இலை செல்வம் வண் கொடி புல்க,Mel ilai selvam van kodi pulka - மெல்லிய இலைத்தழைப்பையும் அழகையுமுடைய வெற்றிலைக்கொடி சூழ்ந்தணைக்க
வீங்கு இள தாள் கமுகின்,Veengu ila thaal kamukin - அத்தாலே முதிர்ந்து இளகிப்பதித்த அடியுரத்தை யுடைய கமுகினருகேயுள்ள
மல் லை மடல் வாழை,Mal lai madal vazhai - செறிந்த இலைகளையும் மடல்களையுமுடைய வாழைகளினுடைய
ஈன் கனி சூழ்ந்து,Ean kani soozhndhu - பழக்குலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதனால்
மணம் கமழ்ந்து,Manam kamazhnthu - பரிமளம் விஞ்சி
புல் இலை தெங்கி னூடு,Pul ilai thengki noodu - செறிந்த ஓலைகளையுடைய தென்னை மரங்களின் நடுவே
கால் உலவும்,Kaal ulavum - தென்றற்காற்று உலாவும்படியான
தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரில்
மல்லல் அம் செல்வம் கண்ணன் தாள்,Mallal am selvam kannan thaal - ப்ரணயித்வமாகிற பெருஞ்செல்வத்தையுடையனான எம்பெருமானது திருவடிகளை
இ மடவரல் அடைந்தாள்,EMadavaral adaindhaal - இத்தலைவி அடைந்தாள் போலும்.