| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3541 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரிலுள்ள அஃறிணைப் பொருள்களுங்கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழாநிற்கு மியல்வைக்கண்டு இத்தலைவியும் அத்திருப்பதி யெம்பெருமானோடே கலந்துவாழப்பெற்றாளென்கிறாள் தோழி.) 7 | மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின் மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர் மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–8-9-7 | மெல் இலை செல்வம் வண் கொடி புல்க,Mel ilai selvam van kodi pulka - மெல்லிய இலைத்தழைப்பையும் அழகையுமுடைய வெற்றிலைக்கொடி சூழ்ந்தணைக்க வீங்கு இள தாள் கமுகின்,Veengu ila thaal kamukin - அத்தாலே முதிர்ந்து இளகிப்பதித்த அடியுரத்தை யுடைய கமுகினருகேயுள்ள மல் லை மடல் வாழை,Mal lai madal vazhai - செறிந்த இலைகளையும் மடல்களையுமுடைய வாழைகளினுடைய ஈன் கனி சூழ்ந்து,Ean kani soozhndhu - பழக்குலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதனால் மணம் கமழ்ந்து,Manam kamazhnthu - பரிமளம் விஞ்சி புல் இலை தெங்கி னூடு,Pul ilai thengki noodu - செறிந்த ஓலைகளையுடைய தென்னை மரங்களின் நடுவே கால் உலவும்,Kaal ulavum - தென்றற்காற்று உலாவும்படியான தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரில் மல்லல் அம் செல்வம் கண்ணன் தாள்,Mallal am selvam kannan thaal - ப்ரணயித்வமாகிற பெருஞ்செல்வத்தையுடையனான எம்பெருமானது திருவடிகளை இ மடவரல் அடைந்தாள்,EMadavaral adaindhaal - இத்தலைவி அடைந்தாள் போலும். |