Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3542 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3542திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரின் வைதிக ஸம்ருத்தியையுங்கண்டு இத்தலைவி அவ்வூர்த்தலைவன் பக்கலிலேயீடுபாடு கொண்டாளென்கிறான் தோழி.) 8
மடவரல் அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே–8-9-8
அன்னைமீர்கட்கு மடவரல் என் சொல்லி சொல்லுகேன்,Annayameer kadku madavural en solli sollugeen - தாய்மாரான உங்களுக்கு இவளது நலத்தைப்பற்றி என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்,
மல்லை செல்வம் வடமொழி மறைவாணர்,Mallai selvam vadamozhi maraivaanar - மஹாஸம்பந்நர்களான ஸம்ஸ்க்ருத வேதாத்யயன பர்ர்களினுடைய
வேள்விபுள்,Velvipul - யாகங்களிலே
நெய் அழல் வான் புகை,Ney azhal vaan pugai - நெய்யிடப்பெற்ற அக்னியினுடைய பெரிய புகையானது
போய்,Poi - கிளம்பிச்சென்று
திடம் விகம்பில் அமர்ர் நாட்டை மறைக்கும்,Thidam vikambil amarr naattai maraikkum - திடமான ஆகாசத்தில் தேலோகத்தை மறைக்கும்படியான
தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரிலே
படம் அரசு அணையான் தன் நாம்ம் அல்லால்,Padam arasu anaiyaan than naam allaal - படமொடுத்த அரவாகிற சயன்த்திலே சயனித்தவனுடைய திருநாம்மல்லது (வேறொன்றையும்)
இவள் பரவாள்,Ival paravaal - இத்தலைவி சொல்லுகின்றிலள்.