| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3543 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (பாட்டினடியிலுள்ள பரவாளிவள் என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே என்பதோடு அந்வயங்காண்க. திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவதுதவிர வேறொன்றுமறியாளித்தலைவி –என்கிறாள் தோழி.) 9 | பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான் விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப கரவார் தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகை நின்றலரும் புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9 | பனி நீர் நிறம் கண்ணபிரான்,Pani neer niram kannapiraan - குளிர் நீர் நிறத்தனான கண்ணபிரானுடைய, விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி,Viravu aar isai marai vedhiyar oli - கலந்து நிரம்பின இசையையுடைய வேதங்களை வைதிகர் சொல்லுவதாலுண்டான ஒலியானது வேலையின் நின்று,Velaaiyin ninru - கடல்போல் முழங்க கரவு ஆர் தடம் தொறும்,Karavu aar thadam thorum - முதலைகள் மிக்கிருந்துள்ள பொய்கைக்ள் தோறும் தாமரை கயம்,Thaamarai kayam - தாமரைத் திரள்கள் தீவிகை நின்று அலரும்,Theevigai ninru alarum - நிலைவிளக்குப்போலே அலராநிற்குமிடமாய் புரவு ஆர் கழனிகள் சூழ்,Puravu aar kazhaneegal soozh - ஸாரம் மிக்க கழனிகளாலே சூழப்பட்டதான திருப்புலியூர்,Thiruppuliyoor - திருப்புலியூரினுடைய புகழ் அன்றி,Pugazh andri - புகழொழிய இவள் இராப்பகல் நின்று மற்று பரவாள்,Ival iraapagal ninru matru paravaal - இத்தலைவி இரவும் பகலும் வேறொன்றைச் சொல்லுகின்றாள். |