திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3543 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3543திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (பாட்டினடியிலுள்ள பரவாளிவள் என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே என்பதோடு அந்வயங்காண்க. திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவதுதவிர வேறொன்றுமறியாளித்தலைவி –என்கிறாள் தோழி.) 9
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான் விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப கரவார் தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகை நின்றலரும் புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9
பதவுரை Show / Hide
பனி நீர் நிறம் கண்ணபிரான்,Pani neer niram kannapiraan - குளிர் நீர் நிறத்தனான கண்ணபிரானுடைய,
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி,Viravu aar isai marai vedhiyar oli - கலந்து நிரம்பின இசையையுடைய வேதங்களை வைதிகர் சொல்லுவதாலுண்டான ஒலியானது
வேலையின் நின்று,Velaaiyin ninru - கடல்போல் முழங்க
கரவு ஆர் தடம் தொறும்,Karavu aar thadam thorum - முதலைகள் மிக்கிருந்துள்ள பொய்கைக்ள் தோறும்
தாமரை கயம்,Thaamarai kayam - தாமரைத் திரள்கள்
தீவிகை நின்று அலரும்,Theevigai ninru alarum - நிலைவிளக்குப்போலே அலராநிற்குமிடமாய்
புரவு ஆர் கழனிகள் சூழ்,Puravu aar kazhaneegal soozh - ஸாரம் மிக்க கழனிகளாலே சூழப்பட்டதான
திருப்புலியூர்,Thiruppuliyoor - திருப்புலியூரினுடைய
புகழ் அன்றி,Pugazh andri - புகழொழிய
இவள் இராப்பகல் நின்று மற்று பரவாள்,Ival iraapagal ninru matru paravaal - இத்தலைவி இரவும் பகலும் வேறொன்றைச் சொல்லுகின்றாள்.