| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3545 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11 | நின்ற மூ உலகுக்கும் நேர்பட்ட நாயகன் தன்,Ninra moo ulakukkum nerpatta naayagan than - உலகங்களெல்லாவற்றுக்கும் வாய்த்த ஸ்வாமியானவனுடைய அடிமை,Adimai - கைங்கரியத்திற்கு நேர்பட்ட,Nerpatta - தகுதியையுடைய தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,Thondar thondar thondar thondan sadagopan - தாஸ தாஸ தாஸாநு தாஸரான ஆழ்வாருடைய சொல் நேர்பட்ட,Soll nerpatta - சொல்வாய்ப்பையுடைய தமிழ் மாலை,Tamizh maalai - தமிழ் மாலையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்திலுள்ளே இவை பத்தும் நேர்பட்டார் அவர்,Ivai pathum nerpattaar avar - இப்பதிகத்தைப் பயிலப்பெற்றவர்கள் நெடுமாற்கு அடிமை செய்ய நேர்பட்டார்,Nedumarku adimai seiyya nerpattaar - ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்ய வாய்த்தவராவர். |