Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3545 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3545திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11
நின்ற மூ உலகுக்கும் நேர்பட்ட நாயகன் தன்,Ninra moo ulakukkum nerpatta naayagan than - உலகங்களெல்லாவற்றுக்கும் வாய்த்த ஸ்வாமியானவனுடைய
அடிமை,Adimai - கைங்கரியத்திற்கு
நேர்பட்ட,Nerpatta - தகுதியையுடைய
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,Thondar thondar thondar thondan sadagopan - தாஸ தாஸ தாஸாநு தாஸரான ஆழ்வாருடைய
சொல் நேர்பட்ட,Soll nerpatta - சொல்வாய்ப்பையுடைய
தமிழ் மாலை,Tamizh maalai - தமிழ் மாலையான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்திலுள்ளே
இவை பத்தும் நேர்பட்டார் அவர்,Ivai pathum nerpattaar avar - இப்பதிகத்தைப் பயிலப்பெற்றவர்கள்
நெடுமாற்கு அடிமை செய்ய நேர்பட்டார்,Nedumarku adimai seiyya nerpattaar - ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்ய வாய்த்தவராவர்.