| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3546 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத கைங்கர்யமாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்றால் மூவுலகாளுஞ் செல்வமும் இத்தோடொவ்வாதென்று இதன் பரம போக்யதையைப் பேசுகிறார்.) 1 | நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால் விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே–8-10-1 | nedu maarku,நெடு மாற்கு - ஸர்வேச்வரனுக்கு adimai seyaveen pol,அடிமை செயவேன்போல் - அடிமை செய்பவன் போலவிருந்து avanai karutha,அவனை கருத - அப்பெருமானை நினைத்தவளவிலே thee kadhigal mutrum,தீ கதிகள் முற்றும் - (என்னிடத்திலிருந்த) தீவினைகளெல்லாம் vanjithu,வஞ்சித்து - வஞ்சனை செய்து (என்னோடு சொல்லாமலே) tadumaarru atra,தடுமாற்று அற்ற - நிச்சயமாக tavirndha sadhir ninaitthaal,தவிர்ந்த சதிர் நினைத்தால் - என்னைவிட்டு நீங்கிப் போனபடியை ஆராயந்து பார்த்தால் viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விஷ்தாரமான மூவுலகையும் பேறாகப் பெற நேர்ந்தாலுங்கூட (அதை உபேக்ஷித்து avan adiyaar adiye koodum idhu allaal,அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - பாகவதர்களின் திருவடிகளையே அடைவது தவிர kodu maavinyen,கொடு மாவினையென் - பெரும் அந்த பாவியாகிய நான் veetum aaru enpathu en,வீடும் ஆறு என்பது என் - (அந்த பாகவத சேஷத்தவ்தை) விடுவதென்று ஒன்று உண்டோ? antho,அந்தோ - இதை நான் சொல்லவும் வேணுமோ? |