Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3546 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3546திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத கைங்கர்யமாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்றால் மூவுலகாளுஞ் செல்வமும் இத்தோடொவ்வாதென்று இதன் பரம போக்யதையைப் பேசுகிறார்.) 1
நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே–8-10-1
nedu maarku,நெடு மாற்கு - ஸர்வேச்வரனுக்கு
adimai seyaveen pol,அடிமை செயவேன்போல் - அடிமை செய்பவன் போலவிருந்து
avanai karutha,அவனை கருத - அப்பெருமானை நினைத்தவளவிலே
thee kadhigal mutrum,தீ கதிகள் முற்றும் - (என்னிடத்திலிருந்த) தீவினைகளெல்லாம்
vanjithu,வஞ்சித்து - வஞ்சனை செய்து (என்னோடு சொல்லாமலே)
tadumaarru atra,தடுமாற்று அற்ற - நிச்சயமாக
tavirndha sadhir ninaitthaal,தவிர்ந்த சதிர் நினைத்தால் - என்னைவிட்டு நீங்கிப் போனபடியை ஆராயந்து பார்த்தால்
viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விஷ்தாரமான மூவுலகையும் பேறாகப் பெற நேர்ந்தாலுங்கூட (அதை உபேக்ஷித்து
avan adiyaar adiye koodum idhu allaal,அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - பாகவதர்களின் திருவடிகளையே அடைவது தவிர
kodu maavinyen,கொடு மாவினையென் - பெரும் அந்த பாவியாகிய நான்
veetum aaru enpathu en,வீடும் ஆறு என்பது என் - (அந்த பாகவத சேஷத்தவ்தை) விடுவதென்று ஒன்று உண்டோ?
antho,அந்தோ - இதை நான் சொல்லவும் வேணுமோ?