Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3547 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3547திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிரண்டுங் கூடினாலும் நான் பெற்ற பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்த்த்தோடு ஒவ்வாதென்கிறார்.) 2
வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2
viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விபுலத்ரிலோக ஸாம்ராஜ்யத்தைப்பெற்றாலும்,
poi,போய் - அதற்கும் மேலான
thaane thaane aanalum,தானே தானே ஆனாலும் - தன்னைத் தானே யநுபவிக்கையாகிற கைவல்ய மோக்ஷம் பெற்றாலும்
puyal megham pol thirumeni ammaan,புயல் மேகம் போல் திருமேனி அம்மான் - மழைகாலத்து மேகம் போன்ற திருமேனி வாய்ந்த எம்பெருமானுடைய
punai poo kazhal adikeel,புனை பூ கழல் அடிகீழ் - சாத்தின புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைத்தான திருவடி வாரத்திலே
sayame,சயமே - ஸ்வயம் பிரயோஜநமாக
adimai thalai nindraar,அடிமை தலை நின்றார் - கைங்கர்யத்தின் மேலெல்லை யிலே நிலை நின்றவர்களுடைய
thiru thal vanangi,திரு தாள் வணங்கி - திருவடிகளைத் தொழுது
immaye,இம்மையே - இஹலோகத்திலேயே
yaan perthadhu,யான் பெற்றது - நான் அடைந்த்து
payane inbam,பயனே இன்பம் - புருஷார்த்தமான சுகமே
paaviyaenukku,பாவியேனுக்கு - பாவியான வெனக்கு
urumo,உறுமோ - (கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள்) இப்பேற்றுக்கு ஒக்குமோ?