Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3548 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3548திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிற் காட்டிலும் விலக்ஷணமான பகவல்லாபமுண்டானாலும் இங்கேயிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடொவ்வாது என்கிறாப்பாட்டில்.) 3
உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே–8-10-3
Siru maa manisar aai,சிறு மா மனிசர் ஆய் - வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு
Ennai aandaar,என்னை ஆண்டார் - என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான
Avan adiyaar,அவன் அடியார் - பாகவதர்கள்
Inge thiriya,இங்கே திரிய - இந்நிலவுலகில் இருக்க
Andri,அன்றி - அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது தவிர
Iv vulagam moonrum udan niraiya siru maa meni nimirnth,இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்ந்த - இம்மூவுலகங்களும் ஏக காலத்தில் இடமடையும் படி தனது சிறிய பெரிய திருமேனியை வளரச்செய்த
Sem thamarai kan enn thirukkuralan,செம்தாமரை கண் எண் திருகுறளன் - புண்டரீகாக்ஷனாய் எனக்கினியனான ஸ்ரீவாமநனுடைய
Naru maa virai naal malar adikeel puguthal paaviyaenukku urumo,நறு மா விரை நாள் மலர் அடிகீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ - மிக்க பரிமளம் வாய்ந்த திருவடித்தாமரைகளிலே சென்று சேர்தல் எனக்குத் தகுமோ?