| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3549 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத சேஷத்வத்திலே யிடுபட்டவர்கள் பகவச் சேஷவத்திலே நிற்கலாகாதென்று சிலர் நினைப்பதுண்டு, அதுதவறு பகவானுடைய முகோல்லாஸத்திற்காக பாகவதர்களையுகப்பதுபோல அந்த பாகவதர்களின் முகோல்லாஸத்திற்காகப் பகவானை யுகப்பதும் ப்ராப்தமே) 4 | இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான் பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய் அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4 | Mun,முன் - முன்பொரு காலத்திலே Iru maanilam undu umizhndha,இரு மாநிலம் உண்டு உமிழ்ந்த - மிகப்பெரிய பூமியை யெல்லாம் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கிப் பிறகு வெளிப்படுத்தின Koalatha,கோலத்த - அழகு வாய்ந்த Sem pavalam vaai,செம் பவளம்வாய் - சிவந்த பவழம் போன்ற அதரத்தையுடைய Senthaamarai kan en ammaan,செம் தாமரை கண் என் அம்மான் - புண்டரீகாக்ஷனான எம்பெருமான் Pongu ezh pugazhkal,பொங்கு ஏழ் புகழ்கள் - பொங்கிக் கிளர்கின்ற தனது திருக்குணங்களானவை Vaaya aai,வாய ஆய் - என் வாக்குக்கு விஷயமாகவும் Pulan kol vadivu,புலன் கொள் வடிவு - மநோஹமான தனது வடிவு En manathu aai,என் மனத்த்து ஆய் - என் மனத்திலுள்ளதாகவும் Angu aay malarkal,அங்கு ஏய் மலர்கள் - அத்தலைக்கு ஏற்ற புஷ்பங்கள் Kaiya aai,கைய ஆய் - என் கையிலுள்ளனவாகவும் பெற்று Vazhipattu oada arulil,வழிபட்டு ஓட அருளில் - பாகவதர்கள் செய்யும் கைங்கரிய மார்கத்திலே நானும் உடன்பட்டு நடக்கும்படியாக அருளாமாகில் Inge thirindhaerku,இங்கே திரிந்தேற்கு - (திருநாடு செல்ல விரும்பாதே) இந்த விபூதியிலேயே இப்படி திரிவேனான எனக்கு Izukkuthu en,இழுக்குற்று என் - என்னதாழ்வு? |