Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3550 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3550திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுடைய திருநாட்டிலே பேரின்பம் நுகர்ந்திருக்கப் பெற்றாலும் அத்தோடே கீழ்ச்சிசொன்ன ஐச்வர்யாதிகளெல்லாம் சேரக்கூடினாலும் இங்கே பாகவதர்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழிபாடி ரஸிக்குமதோடொக்குமோ வென்கிறார்) 5
வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5
Vazhipattu oadu arul petru,வழிபட்டு ஓட அருள் பெற்று - நித்ய கைங்கரியம் பண்ணும்படியாக அவனது திருவருளைப் பெற்று
Maayan,மாயன் - ஆச்சர்ய விபூதி யுக்தனான அந்த ஸர்வேச்வரனுடைய
Koalam malar adi keezh,கோலம் மலர் அடி கீழ் - அழகிய திருவடித் தாமரைகளின் கீழே
Kazhipattu oadum sudar sothi vellathu,கழிபட்டு ஓடும் சுடர் சோதி வெள்ளத்து - சுழித்து ஓடுகிற சுடர்ச்சோதி வெள்ள மென்னும்படியான பரம பத்த்திலே
Inputru irundhaalum,இன்புற்று இருந்தாலும் - ஆனந்த வாழ்ச்சியாக இருக்கப்பெற்றாலும்
Muzhudhum,முழுதும் - கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யாதிகள் எல்லாம் கூடினாலும்
Izhi pattu oadum udalil pirandhu,இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து - தாழ்ச்சியின் மிக எல்லையில் நிற்பதான சரீரத்திலே பிறந்து
Katru,கற்று - தன்னுடைய குணங்களை நான் அப்யளித்து
Mozhipattu oadum kali amudham,மொழிபட்டு ஓடும் களி அமுதம் - அவ்வநுபவத்தா லுண்டான ப்ரீதிசொல்லாய் ப்ரவஹிக்கிற கவியாகிற அம்ருத்த்தை
Nukaruchchi urumo,நுகர்ச்சி உறுமோ - பாகவதர்களோடு கூடியநுபவித்து ரஸிக்கைக்கு ஒக்குமோ? (ஒவ்வாது)