Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3552 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3552திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஸ்வயம்புருஷார்த்த மாக்க் கொள்ளும் பகவதநுபவம் வேண்டா, பாகவத ப்ரீதிரூபமான பகவதநுபவத்தைப் பண்ணிக்கொண்டு அந்த பகாவதர்களோடு கூடி வாழ்கையெ நமக்கு நாளும வாய்க்கவேணுமென்கிறார்.) 7
தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7
Tani maa pugal e yennjanrum nirkumpadi ay,தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி ஆய் - ஒப்பில்லாத சிறந்த புகழே காலமுள்ளதனையும் வேதாந்த ப்ரஸித்தமாய் நிற்கும்படியாக
Taan tonri,தான் தோன்றி - தானோ (படைப்புக் கடவுளாக) ஆவிர்ப்பவித்து
Muni,முனி - (ஸ்ருஷ்டிக்காக) ஸங்கல்பிக்கிற
Maa piram,மா பிரம்ம் - பரப்ரஹ்ம்மாகிற
Mudhal vithu ay,முதல் வித்து ஆய் - பரமநாரணமாய்
Ulakam moonrum,உலகம் மூன்றும் - லோகங்களை யெல்லாம்
Mulaippitha,முளைப்பித்த - உண்டாக்கின
Tani maa teyvam,தனி மா தெய்வம் - ஒப்பற்ற பர தேவதையினுடைய
Thalira adi keizhl,தளிர அடி கீழ் - தளிர்போன்ற திருவடியின் கீழே
Puguthal anri,புகுதல் அன்றி - புகுகையைத் தவிர்த்து
Avan adiyar,அவன் அடியார் - ஸ்ரீவைஷ்யவர்களுடைய
Nani maa kalavi inbame,நனி மா கலவி இன்பமே - மிகச் சிறந்த்தான ஸம்ச்லேஷ ஸுகமே
Nankatkku nalum vayntha,நங்கட்கு நாளும் வாய்ந்த - நமக்கு எப்போதும் வாய்க்க வேணும்