| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3553 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவதர்களின் திரள்களைக் கண்டு கொண்டிருந்தாலே போதுமே யென்கிறாரிப்பாட்டில்.) 8 | நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8 | Nalir neer kadalai padaittu,நளிர் நீர் கடலை படைத்து - குளிர்ந்த நீரையுடைய கடலை யுண்டாக்கி Saman ilaadha,சமன் இலாத - ஒப்பில்லாத Than pala thaalum tholum mudikulum,தன் பல தாளும் தோளும் முடிகளும் - தன்னுடைய பல திருவடிகளையும் திருத்தோகளையும் திருமுடிகளையும் Parappi,பரப்பி - பரப்பிக்கொண்டு Neelum padar poo,நீளும் படர் பூ - நீண்டு படர்ந்த புஷ்பங்களையும் Karppagam kaavum,கற்பகம் காவும் - கற்பகச் சோலையையும் Nirai pal naayitrin kolum udaiya,நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய - நிறைந்த பல ஆதித்ய தேஜஸ்ஸையு முடைத்தான Mani malai pol,மணி மலை போல் - மாணிக்கமலை போலே Kidanthaan,கிடந்தான் - கண்வளர்ந்தருளின பெருமானுடைய Thamarkal,தமர்கள் - பக்தர்களோ டுண்டான Kootam,கூட்டம் - சேர்த்தியானது Nangadku naalum vaaykka,நங்கட்கு நாளும் வாய்க்க - எமக்கு எப்போதும் உண்டாகவேணும். |