Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3553 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3553திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவதர்களின் திரள்களைக் கண்டு கொண்டிருந்தாலே போதுமே யென்கிறாரிப்பாட்டில்.) 8
நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8
Nalir neer kadalai padaittu,நளிர் நீர் கடலை படைத்து - குளிர்ந்த நீரையுடைய கடலை யுண்டாக்கி
Saman ilaadha,சமன் இலாத - ஒப்பில்லாத
Than pala thaalum tholum mudikulum,தன் பல தாளும் தோளும் முடிகளும் - தன்னுடைய பல திருவடிகளையும் திருத்தோகளையும் திருமுடிகளையும்
Parappi,பரப்பி - பரப்பிக்கொண்டு
Neelum padar poo,நீளும் படர் பூ - நீண்டு படர்ந்த புஷ்பங்களையும்
Karppagam kaavum,கற்பகம் காவும் - கற்பகச் சோலையையும்
Nirai pal naayitrin kolum udaiya,நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய - நிறைந்த பல ஆதித்ய தேஜஸ்ஸையு முடைத்தான
Mani malai pol,மணி மலை போல் - மாணிக்கமலை போலே
Kidanthaan,கிடந்தான் - கண்வளர்ந்தருளின பெருமானுடைய
Thamarkal,தமர்கள் - பக்தர்களோ டுண்டான
Kootam,கூட்டம் - சேர்த்தியானது
Nangadku naalum vaaykka,நங்கட்கு நாளும் வாய்க்க - எமக்கு எப்போதும் உண்டாகவேணும்.