| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3554 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப் பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும்.) 9 | தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன் குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9 | Tamarkal kootam,தமர்கள் கூட்டம் - பக்த வர்க்கங்களுக்கு வருகின்ற Val vinaiyai,வல் வினையை - வலிய விரோதிகளை Naasam seyyum sadhir,நாசம் செய்யும் சதிர் - போக்கும்படியான திறமையுடைய Moorthi,மூர்த்தி - ஸ்வாமியாய் Amar kol,அமர் கொள் - போர் செய்யக் கிளர்கின்ற aazhi sangu vaalvil thandu aadhi,ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி - பஞ்சாயுதங்கள் முதலிய Pal padaiyan,பல் படையன் - திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய் Kumaran,குமரன் - நித்ய்யுவாவாய் Kolam ainganai vel thadai,கொலம் ஐங்கணை வேள் தாதை - அழகிற் சிறந்த பஞ்சபாணனான மன்மதனுக்குத் தந்தையான் எம்பெருமானுடைய Kodu il adiyar tam,கோது இல் அடியார் தம் - கோதற்ற அடியார்க்கு Tamarkal tamarkal tamarkal aam sadhir,தமர்கள் தமர்கள் தமர்கள் ஆம் சதிர் - அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே Tamiyerkku vaaykka,தமியேற்கு வாய்க்க - துணையற்றி அடியேனுக்கு வாய்க்கவேணும் |