திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3554 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3554திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப் பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும்.) 9
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன் குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9
பதவுரை Show / Hide
Tamarkal kootam,தமர்கள் கூட்டம் - பக்த வர்க்கங்களுக்கு வருகின்ற
Val vinaiyai,வல் வினையை - வலிய விரோதிகளை
Naasam seyyum sadhir,நாசம் செய்யும் சதிர் - போக்கும்படியான திறமையுடைய
Moorthi,மூர்த்தி - ஸ்வாமியாய்
Amar kol,அமர் கொள் - போர் செய்யக் கிளர்கின்ற
aazhi sangu vaalvil thandu aadhi,ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி - பஞ்சாயுதங்கள் முதலிய
Pal padaiyan,பல் படையன் - திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய்
Kumaran,குமரன் - நித்ய்யுவாவாய்
Kolam ainganai vel thadai,கொலம் ஐங்கணை வேள் தாதை - அழகிற் சிறந்த பஞ்சபாணனான மன்மதனுக்குத் தந்தையான் எம்பெருமானுடைய
Kodu il adiyar tam,கோது இல் அடியார் தம் - கோதற்ற அடியார்க்கு
Tamarkal tamarkal tamarkal aam sadhir,தமர்கள் தமர்கள் தமர்கள் ஆம் சதிர் - அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே
Tamiyerkku vaaykka,தமியேற்கு வாய்க்க - துணையற்றி அடியேனுக்கு வாய்க்கவேணும்