| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3556 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப் பெற்று ஸகுடும்பமாக வாழப் பெறுவரென்று பயனுரைத்த தலைக் கட்டுகிறார்.) 11 | நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11 | Nalla kootpaadu,நல்ல கோட்பாடு - நல்ல கட்டளைப்பாடுடைய Ulagangal moonru in ulloam,உலகங்கள் மூன்றின் உள்ளும் - மூவுலகங்களினுள்ளும் Thaan niraintha,தான் நிறைந்த - வியாபீத்த Alli kamalam kannanai,அல்லி கமலம் கண்ணனை - விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக Am than kurukoor sadagopan sollappatta aayirathul,அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் - ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள் Ivaaiyum pattum vallaarkal,இவையும் பத்தும் வல்லார்கள் - இவை பத்தையும் ஓதவல்லவர்கள் Konda pentir makkale,கொண்ட பெண்டிர் மக்களே - ஸ குடும்பமாக Nalla pathal,நல்ல பத்த்தால் - பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே Manai vaazhvaar,மனை வாழ்வார் - க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள். |