Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3557 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3557திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஔபாதிக பந்துக்களான களத்ர புத்திராதிகளால் ஒருபயனுமில்லை. அவர்கள் ஆபத்துக்கு உதவார்கள். கிருபாதிகபந்துவான ஸர்வேச்வானே ஆபத்பந்து. அவனையேபற்றி யுஜ்ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார்.) 1
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1
கொண்ட பெண்டிர்,Kondapendir - நம் உறவினர் என்று நாம் நினைக்கும்
மக்கள் உற்றார்,Makkal utrar - மனைவிமக்கள் உற்றார்
சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர் மற்றுமுள்ளோர்
கண்டதோடு,Kandodu - நம் கையில் பொருள் இருக்கும் வரை
பட்டது அல்லால்,Pattathu allal - உறவாடுவார்களே அன்றி
காதல் மற்று,Kadhal matru - உண்மையான உள் அன்பு ஒன்றும்
யாதும் இல்லை,Yadum illai - யாரிடமும் இல்லை
எண் திசையும்,En thisaiyum - ஆதலால் எட்டுத் திக்கிலும்
கீழும் மேலும்,Keelum melum - பாதாளத்திலும் மேல் உலகிலும்
முற்றவும்,Mutravum - உள்ள அனைத்தையும்
உண்ட,Unda - பிரளயத்தில் உண்டு வயிற்றில் வைத்து
பிரான்,Piran - காத்த எம்பெருமானுக்கு
தொண்டரோம் ஆய்,Thondarom aai - தொண்டராய்
உய்யல் அல்லால்,Uyyal allal - இருந்து கைங்கர்யம் செய்வது தவிர
இல்லை துணையே கண்டீர்,Illai thunaiye kandir - வேறு உபாயம் இல்லை