Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3558 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3558திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஆபாஸபந்துக்கள் உபகாரம் செய்வாரைப்போலேயிருந்து தங்களுக்கு வேண்டிய ப்ரயோஜனங்களைத் தலைக்கட்டிக் கொள்வர்கள்; அவர்கள் நம்பத்தகுந்தவர்கவல்லர்; நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை யுண்டாக்கி ஆபத்ஸகனாரும் ஸர்வேச்வரனைப் பற்றுமதே ப்ரயோ ஜனமென்கிறது இப்பாட்டு.) 2
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே–9-1-2
துணையும்,Thunaiyum - ஆபத்துக் காலத்தில் துணை போலவும்
சார்வும்,Sarvum - சார்வு போலவும்
ஆகுவார் போல்,Aakuvaar pol - உதவுவது போல்
சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர்களும் மற்றவர்களும்
ஆக்கம் உண்டேல்,Aakkam undel - செல்வம் உள்ள வரை
அட்டைகள் போல்,Attaikal pol - அட்டைகள் போல்
அணைய வந்த,Anaiya vantha - உடன் வந்து
சுவைப்பர்,Suvaippar - ஒட்டி உறவாடுவார்கள்
கணை ஒன்றாலே,Kanai ondrale - ஓர் அம்பாலே
ஏழ் மரமும் எய்த,Ezhu maramum eitha - ஏழு மராமரங்களையும் எய்த
எம் கார் முகிலை,Em kar mugilai - எம் காளமேகப் பெருமானை
புணை என்று உய்ய,Punai endru uyya - தஞ்சம் என்று உய்ய
போகல் அல்லால்,Pogal allal - ஒரே வழி என்பதைத் தவிர
பொருளே இல்லை,Porule illai - வேறு வழி இல்லை என்பதை
கண்டீர்,Kandir - அறிவீர்களாக