| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3558 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஆபாஸபந்துக்கள் உபகாரம் செய்வாரைப்போலேயிருந்து தங்களுக்கு வேண்டிய ப்ரயோஜனங்களைத் தலைக்கட்டிக் கொள்வர்கள்; அவர்கள் நம்பத்தகுந்தவர்கவல்லர்; நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை யுண்டாக்கி ஆபத்ஸகனாரும் ஸர்வேச்வரனைப் பற்றுமதே ப்ரயோ ஜனமென்கிறது இப்பாட்டு.) 2 | துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும் அணையவந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே–9-1-2 | துணையும்,Thunaiyum - ஆபத்துக் காலத்தில் துணை போலவும் சார்வும்,Sarvum - சார்வு போலவும் ஆகுவார் போல்,Aakuvaar pol - உதவுவது போல் சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர்களும் மற்றவர்களும் ஆக்கம் உண்டேல்,Aakkam undel - செல்வம் உள்ள வரை அட்டைகள் போல்,Attaikal pol - அட்டைகள் போல் அணைய வந்த,Anaiya vantha - உடன் வந்து சுவைப்பர்,Suvaippar - ஒட்டி உறவாடுவார்கள் கணை ஒன்றாலே,Kanai ondrale - ஓர் அம்பாலே ஏழ் மரமும் எய்த,Ezhu maramum eitha - ஏழு மராமரங்களையும் எய்த எம் கார் முகிலை,Em kar mugilai - எம் காளமேகப் பெருமானை புணை என்று உய்ய,Punai endru uyya - தஞ்சம் என்று உய்ய போகல் அல்லால்,Pogal allal - ஒரே வழி என்பதைத் தவிர பொருளே இல்லை,Porule illai - வேறு வழி இல்லை என்பதை கண்டீர்,Kandir - அறிவீர்களாக |