Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3561 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3561திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (மாதர்களால் படும் அவமானங்களை யெடுத்துரைத்து எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே உய்வு என்கிறாரிப்பாட்டில்.) 5
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5
சதிரம் என்று,Sathiram endru - சதிரையுடையோ மென்று
நம்மை நாமே சம்மதித்து,Nammai name sammathithu - தம்மைத் தாங்களே பஹீமானித்துக் கொண்டு
இன்மொழியார்,Inmozhiyaar - வெறும் பேச்சினிமையையுடையரான மாதர்களினுடைய
மதுரபோகம்,Mathurapogam - இனிய போகங்களை
அற்றவரே,Atravare - அனுபவித்தவர்களே
லைகி,Laiki - மற்றொரு காலத்திலே
மற்று ஒன்று உறுவர்,Matru onru uravar - வாய்கொண்டு சொல்ல வொண்ணாத அவமானங்களை அடைவர்கள்
அதில் கொள் செய்கை அசுரர் மங்க,Adhil kol seigai asurar manga - (ஆனபின்பு) அஞ்சவேண்டுஞ் செய்கைகளையுடைய அசுரர்கள் தொலையும்படி
வடமதுரை பிறந்தாற்கு,Vadamathurai pirandarku - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரானுக்கு
எதிர்கொள் ஆள் ஆய்,Ethirkol aal aai - ஆபிமுக்யம் பண்ணுமடியவர்களாகி
உய்ரல் அல்லால்,Uyiral allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
இன்பம் இல்லை,Inbam illai - (வேறு வழியில்) சுகமில்லை.