| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3562 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில்.) 6 | இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார் மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6 | இன்பம் இல்லை! கண்டீர்,Inbam illai! Kandir - (இவ்வுலகில்) சுகமே யிருப்ப தொன்று இல்லைகிடீர் அந்தோ,Antho - ஐயோ! இதை நாமெடுத்துச் சொல்ல வேணுமோ ? உள்ளது நினையாதே,Ullathu ninayaathe - சாச்வதமான புருஷார்த்தத்தை நினையாதே தொல்லையார்கள்,Thollaiyaarkal - பழைய காலத்திலிருந்தவர்கள் எத்தனைவர்,Ethanaivar - எத்தனை பேர் தோன்றிகழிந்து ஒழிந்தார்,Thonriginazinthu ozhinthar - ஜன்மமரணங்களே யாத்திரையாய்ப் போனார்கள் (அன்னவர்கள் கணக்கற்றவர்கள்) மல்லை மூதூர் வடமதுரை,Mallai moothur vadamathurai - (ஆன பின்பு) செல்வம் மிகுந்த புராதனமான வடமதுரையிலே பிறந்தவன்,Piranthavan - வந்து பிறந்து கண்ணபிரானுடைய வண் புகழே சொல்லி,Van pugale solli - உதாரமான திருக்குணங்களையே கீர்த்தனம் பண்ணி உய்ய போகில் அல்லால்,Uyya pogil allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய சுருக்கு,Surukku - சுருங்கச் சொல்லும் வழி மற்று ஒன்று இல்லை,Matru onru illai - வேறொன்றுமில்லை. |