| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3563 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (கீழ்ப்பாட்டில் சுருக்கே யென்றதைச் சுருங்கவருளிச் செய்கிறார். எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கின்றார். 7 | மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7 | மற்றொன்று இல்லை,Matronru illai - உபாயாந்தரமில்லை மாநிலத்து, எவ் உயிர்க்கும்,Maanilathu, ev uyirkum - பரந்த நிலவுலகிலுள்ள யாவர்க்கும் சுருங்க சொன்னோம்,Surunga sonnom - இது சுருக்கமாகச் சொல்லுகிறோம் சிற்ற வேண்டா,Sitra venda - ஆயாஸகரமான ப்ரவருத்திகளிலேநின்று உழலவேண்டா சிந்திப்பே அமையும்,Sindippe amaiyum - மாநஹிகமான அத்யவஸாயமே போதும் கண்டீர்கள் அந்தோ,Kandirgal antho - கண்டீர் அந்தோ-; கூட மதுரை பிறந்தான்,Kooda mathurai piranthaan - வடமதுரையிலே அவதரித்தவனான எங்கள் பெற்றத்து ஆயன்,Engal petrathu aayan - எங்கள் கோபாலகிருஷ்ணணுடைய குற்றம் இல்சீர்,Kutram ilseer - குற்றமற்ற திருக்குணங்களை வைகல் கற்று வாழ்தல் இது,Vaigal katru vaalthal idhu - எப்போதும் கற்று வாழ்தாலகிறவிது குணம்,Kunam - குணமாகுமே தவிர குற்றம் அன்று,Kutram anru - குற்றமாகாது. |