Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3563 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3563திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (கீழ்ப்பாட்டில் சுருக்கே யென்றதைச் சுருங்கவருளிச் செய்கிறார். எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கின்றார். 7
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7
மற்றொன்று இல்லை,Matronru illai - உபாயாந்தரமில்லை
மாநிலத்து, எவ் உயிர்க்கும்,Maanilathu, ev uyirkum - பரந்த நிலவுலகிலுள்ள யாவர்க்கும்
சுருங்க சொன்னோம்,Surunga sonnom - இது சுருக்கமாகச் சொல்லுகிறோம்
சிற்ற வேண்டா,Sitra venda - ஆயாஸகரமான ப்ரவருத்திகளிலேநின்று உழலவேண்டா
சிந்திப்பே அமையும்,Sindippe amaiyum - மாநஹிகமான அத்யவஸாயமே போதும்
கண்டீர்கள் அந்தோ,Kandirgal antho - கண்டீர் அந்தோ-;
கூட மதுரை பிறந்தான்,Kooda mathurai piranthaan - வடமதுரையிலே அவதரித்தவனான
எங்கள் பெற்றத்து ஆயன்,Engal petrathu aayan - எங்கள் கோபாலகிருஷ்ணணுடைய
குற்றம் இல்சீர்,Kutram ilseer - குற்றமற்ற திருக்குணங்களை
வைகல் கற்று வாழ்தல் இது,Vaigal katru vaalthal idhu - எப்போதும் கற்று வாழ்தாலகிறவிது
குணம்,Kunam - குணமாகுமே தவிர
குற்றம் அன்று,Kutram anru - குற்றமாகாது.