Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3564 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3564திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-1-8-எம்பெருமான் இங்கே வந்து திருவவதாரம் பண்ணி யருளுகைக்கு நிதானத்தைச் சொல்லி -அவனையே ரக்ஷகனாக பற்றும் அத்தனை போக்கி ஒருவருக்கும் வேறு ஒரு பிரயோஜனம் இல்லை -என்கிறார் .) 8
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8
வாழ்தல் இது குணம் கண்டீர்,Vaalthal idhu kunam kandir - வாழுகிறவி அவன்றோ எல்லார்க்கும் குணமாவது
அந்தோ,Antho - வாழும் வகையறியாதபடி எண்
மாயவன் அடி பாவி,Maayavan adi paavi - ஸர்வேச்வரனுடைய திருவடிகளை துதித்து (பகவத்குணு நுபவம் பண்ணி)
போழ்துபோ,Polthupo - காலசேஷபம்பண்ண வேறுமென்று
உள்ளகிற்கும்,Ullakirkkum - நினைக்கவல்லவர்களான
புன்மை இல்லாவர்கக்கு,Punmai illaavarkkakku - உத்தமாதிகாரிகளுக்கு
வாழ்துணை ஆ,Vaalthunai aa - வாழ்ச்சிக்த துணையாவதற்காக
வடமதுரை பிறந்தவன்,Vadamathurai pirandhavan - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணனுடைய
வண் புகழே,Van pugale - திக்குணங்களையே
வீழ்துணை ஆ போம் இதனில்,Veerthunai aa pom idhanil - ஆசைப்படுந் துணையாகக் கொண்டு நடப்பதிற்காட்டிலும்
மிக்கது யாதும் இல்லை,Mikkathu yadhum illai - மேற்பட்ட வாழ்வு யாதொன்றுமில்லை.