| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3565 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானைத் தவிர்த்து வெறொன்றை ரக்ஷகமாகப் பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையுங்கெட்டு அனர்த்தப்பட்டுப் போவர்கள்; ஆனபின்பு அவனல்லது புகலில்லை யென்கினறார்.) 9 | யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம் மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9 | அதனில் மிக்குயாதும் இல்லை என்று என்று அது கருதி,Adhanil mikku yadhum illai endru endru adhu karuthi - (பகவத்விஷயம் தவிர வேறொன்றைப் பற்றி நின்று) அதிற்காட்டிலும் மேம்பட்ட தொன்றுமில்லை யென்று பலகாலும் அதையே சிந்தனை செய்யுமளவில் காது செய்வான் கூதைசெய்து,Kaathu seivaan koodaiseithu - கனங்குழையிடக் காதுபெருக்கப் புகுந்து பண்டுள்ளதையும் போக்கிக் கூதை செய்யுமா போல கடை முறை வாழ்க்கையும் போம்,Kadai murai vaalkaiyum pom - கடைகெட்ட ஸம்ஸார வாழ்க்கைக்கும் ஹானிவந்த தாமித்தனை (ஆன பின்பு) மாதுகிலின் கொடிகாள் மாடம்,Mathukilin kodikal maadam - பெரிய த்வஜபடங்களைக் கொண்ட மாடங்களைக் புடைத்தான வட மதுரை பிறந்த,Vada mathurai pirandha - வடமதுரையிலே வந்தவதரிந்த தாது சேர்தோள் கண்ணன் அல்லால்,Thaathu serthol kannan allal - மாலையணிந்த தோள்களையுடைய கண்ணனைத் தவிர்த்து சரண் இல்லை கண்டீர்,Saran illai kandir - வேறொரு புகலில்லை திடீர் |