Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3572 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3572திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இப்பாட்டில் *கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை மயூர்ந்தானே!* என்ற விளியினால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே தமக்கு வந்து தோற்றி யருளவேணுமென்று பிரார்த்திக்கின்றமை விளங்கும்.) 5
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5
பளவம் நன்படர் கீழ்,Palavam nanpadar keezh - நல்ல பவளப் படரின் கீழே
சங்கு உளை,Sangu ulai - சங்குகள் உறையப் பெற்ற
பொருநல்,Porunal - தாமிர பர்ணியையுடைய
நண் திருப்புளிங்குடி கிடந்தாய்,Nan thiruppulingudi kidandhai - அழகிய திருப்புளிங் குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கவளம் மா களிற்றின்,Kaval ma kalittrin - பவளங்கொள்ளுமியல்லினான கஜேந்திராழ்வானுடைய
இடர் கெட,Idar keda - துயரம் தீரும்படி
தடத்து,Thadathu - பொய்கைக் கரைக்கு
காய் சினம் பறவை ஊர்ந்ததானே,Kai sinam paravai oornthathane - (விரோதிகள் திறந்து) வெல்லிய கினத்தை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு வந்தவனே!
பவளம் போல கனிவாய் சிவப்ப,Pavalam pola kanivai sivappa - பவளம் போன்று கனிந்த அதரம் விந்து தோன்ற
நின் பல் நிலா முத்தம்,Nin pal nila mutham - உன்னுடைய பல்லாகிற நிலாவையுடைய அதரத்தினது
கதிர் தவழ் முறுவல் செய்து,Kathir thaval muruval seithu - கதிர் உள்ளடங்காதே புறம்பே தவழும்படி புன்முறுவல் செய்து
காண நி வந்து,Kana ni vandhu - நான் காணும்படி நீ வந்தருளி
நின் திரு கண் தாமரை தயங்க நின்றருளாய்,Nin thiru kan thamarai thayanga nindrarulai - உனது திருக்கண்களாகிற தாமரை விளங்கும்படி நின்றருளவேணும்.