| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3573 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய அபி லஷிதங்கள் செய்ய ஒண்ணாத படி பிரதிபந்தகங்கள் உண்டு என்னில் –ஆஸ்ரிதருடைய ஆபத்து போக்குகைக்காக திவ்ய ஆயுதங்கள் ஏந்தி இருக்கிற நீ மாலி ப்ரப்ருதிகளான ராக்ஷஸரை முடித்தது போலே என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் -என்கிறார்.) 6 | காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே–9-2-6 | பொன்மலையின் மீ மிசை,Ponmalaiyin mee misai - பொன்மயமான மஹாமேருமலையின் மேலே படிந்த கார்முகில் போல,Kaarmugil pola - காள மேகம் போலே காய் சினம் பறவை ஊர்ந்து,Kai sinam paravai oornthu - வெல்லிய சினத்தையுடைய பக்ஷி ராஜனை நடத்தி மா சினம் மாலி,Maa sinam maali - பெரிய சினத்தை யுடையனாய்க் கொண்டு வந்த மாலி யென்ன மான் மாலி,Maan maali - சமாலி யென்ன என்றவர் அங்கு பட,Enravar angu pada - இப்படிப்பட்டவர்கள் அங்கே முடியும் படியாக கனன்று முன் நின்ற,Kanandru mun ninra - சீறி அவர்கள் முன்னே நின்ற காய் சின யேந்தே!,Kai sina yenthe! - காய்சின வேந்தென்னுச் திரு நாமமுடைய பெருமானே! கதிர் முடியானே,Kathir mudiyane - விளங்காநின்ற திருவபிஷேகத்தை புடையவனே! கலி வயல் திரு புளிங்குடியாய்,Kali vayal thiru pulingudiyai - செழித்த வயலையுடை திருப் புளிங்குடியில் வாழ்பவனே! காய்சினம்,Kaisinam - வெவ்விய சினத்தை யுடைய ஆழி சங்கு வாள்வில் தண்டு,Aazhi sangu vaalvil thandu - திருவாழி முதலான பஞ்சாயு தங்களையும் வந்தி,Vandi - திருக்கைகளில் தரித்துக் கொண்டு எம் இடர் கடிவானே,Em idar kadi vaane - எமது இடங்களைப் போக்குமவனே. (திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்) |