Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3578 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3578திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார்.) 11
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11
குரைகடல் கடைந்தவன் தன்னை,Kuraikadal kadainthavan thannai - குமுறுகின்ற கடலைக் கடைந்தவனான எம்பெருமானைக் குறித்து
கூவுதல் வருதல் செய்திடாய் என்று,Koovudhal varudhal seidhidai endru - அழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ இரண்டதொன்று செய்ய வேணுமென்று அபேக்ஷித்து
மேலி நன்கு அமர்ந்த,Meli nangu amarntha - (அப்படியே பெறுகையாலே) நன்கு தரிக்கப்பெற்ற
வியன்புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்,Viyan punal porunal vazhuthi naadan sadagopan - பரிபூர்ணமான தீர்த்ததையுடைய தாமிர பர்ணி சூழ்ந்த வழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வாருடைய
நாஇயல் பாடல்,Naa iyal paadal - திருநாவின் தொழிலான லாகிய
ஆயிரத்துள்ளும்,Aayirathullum - ஆயிரம் பாசுரங்களினுள்ள
இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இப்பதிகத்தைக் கற்க வல்லவர்கள்
மூன்று உலகம் அளந்தான் அடி இணை,Moondru ulagam alandhaan adi inai - திரி விக்கிரமனுடைய பாதங்களை
ஓவுதல் இன்றி,Ovudhal inri - அநவரதமும்
உள்ளத்து ஓர்வார்,Ullathu oorvaar - நெஞ்சிலே அநுஸ்திக்கப் பெறுவர்கள்.