Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3579 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3579திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (அவன் நாராயணனாகையாலே நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுமை நிஸ்ஸந்தேஹமென்று தம்முள் தாமே அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.) 1
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1
ஓர் ஆயிரம் ஆய்,Or aayiram aai - ஒரு திருநாமமே ஆயிரம் திருநாமமாய்க் கொண்டு
உலகு எழ் அளிக்கும்,Ulaku ezh alikkum - ஏழுலகங்களையும் ரக்ஷிக்கும் படியான்
ஆயிரம் பேர் கொடது ஓர்பீடு உடையன்,Aayiram per kodadhu orpeedu udaiyan - ஆயிரந் திருநாமங்களை யுடையனாயிரு க்கையாகிற விலக்ஷணமான பெருமையை யுடையனும்
நாளம் கார் ஆயின,Naalam kaar aayin - காளமேகம்போலே சாமளமான
நல்மேனியினன்,Nal meniyinan - அழகிய திருமேனியையுடையனுமான
நாராயணன் அவனே நாங்கள் பிரான்,Naarayanan avane naangal praan - நாராயணனே நமக்கு உபகாரகண்