திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3580 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3580திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் நாராயண சப்தம் ப்ரஸ்துதமாகையாலே அதன் பொருளைப் பன்னி யுரைக்கிறாரிதில்.) 2
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே யவனும் அவனுமவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2
பதவுரை Show / Hide
அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே,gal gnalam padaiththu idanthaan avane - விபுலமான ஜகத்தைப் படைத்ததும் (வராஹ மூர்த்தியாகி) இடந்ததும் அப்பெருமானே
அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே,Ahthu undu umizhndhaan alandhaan avane - அந்த ஜகத்தை உண்டதும் உமிழ்ந்ததும் அளந்ததும் அவனே
அவனும் அவனும் அவனும் அவனே,Avanum avanum avanum avane - பிரமனும் சிவனும இந்திரனும் அவனே
மற்று எல்லோமும் அவனே,Matru ellomum avane - மற்றுள்ள ஸகல சேதநாசேதங்களும் அவனே (என்னு மில்லிஷயத்தை)
அறிந்தனம்,Arindanam - (அவன் தந்த ஞானத்தாலே) அறிந்து கொண்டோம்