| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3581 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறியப்போகாத பெருமானை நான் அவனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே உள்ளபடி அறியப்பெற்றேனென்கிறார்.) 3 | அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3 | அறிந்தன வேதம் அரு பொருள் நூல்கள்,Arinjana vedam aru porul noolgal - தத்துவத்தை யறிந்தலையாயிருக்கிற வேதங்களினுடைய அரிய பொருள்களை யுறுதியிட வல்ல இதிஹாஸ புராணாதி நூல்களானவை அருபொருள் ஆதல் அறிந்தன கொள்க,Aruporul aadhai arinjana kolga - எம்பெருமான் அறிவதற்கரிய பொருள் என்றில்வளவே அறிந்ததாகக் கொள்ளத்தகும் அறிந்தனர் எல்லாம்,Arinjanar ellam - ஞானிகளான யாவரும் அரியை வணங்கி,Ariyai vanangi - ஸர்வேச்வரணை ஆச்ரயித்த நோய்கள் அறுக்கும் மருந்து,Noigal arukkum marundhu - தங்களுடைய ஸம்ஸார வியாதிகளை போக்க வல்ல மருந்தாக அறிந்தனர்,Arindanar - அவனைத் தெரிந்து கொண்டார்கள் (இவ்வளவேயல்லது அவனுடைய யீடுபட்டிலர் என்றவாறு) |