Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3581 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3581திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறியப்போகாத பெருமானை நான் அவனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே உள்ளபடி அறியப்பெற்றேனென்கிறார்.) 3
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3
அறிந்தன வேதம் அரு பொருள் நூல்கள்,Arinjana vedam aru porul noolgal - தத்துவத்தை யறிந்தலையாயிருக்கிற வேதங்களினுடைய அரிய பொருள்களை யுறுதியிட வல்ல இதிஹாஸ புராணாதி நூல்களானவை
அருபொருள் ஆதல் அறிந்தன கொள்க,Aruporul aadhai arinjana kolga - எம்பெருமான் அறிவதற்கரிய பொருள் என்றில்வளவே அறிந்ததாகக் கொள்ளத்தகும்
அறிந்தனர் எல்லாம்,Arinjanar ellam - ஞானிகளான யாவரும்
அரியை வணங்கி,Ariyai vanangi - ஸர்வேச்வரணை ஆச்ரயித்த
நோய்கள் அறுக்கும் மருந்து,Noigal arukkum marundhu - தங்களுடைய ஸம்ஸார வியாதிகளை போக்க வல்ல மருந்தாக
அறிந்தனர்,Arindanar - அவனைத் தெரிந்து கொண்டார்கள் (இவ்வளவேயல்லது அவனுடைய யீடுபட்டிலர் என்றவாறு)